விருதுநகர், ஜூலை.25- மாணவர்களின் கற்றல் திறனை பாதிக்கும் எண் ணும் எழுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். பதவி உயர் வுக்கு தகுதித் தேர்வை கார ணம் காட்டி காலதாமதப் படுத்தக் கூடாது. இஎம்ஐஎஸ் வலைதளப் பணியில் இருந்து ஆசிரியர்களை விடு விக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி விருதுநகரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணி சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவல கம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு ஜி. பாலசுப்பிரமணியன் தலை மையேற்றார். கல்வி மாவட்டத் தலைவர்கள் நாகேந்திரன், முத்துராஜ், பாப்பா ஆகியோர் முன் னிலை வகித்தனர். கோரிக் கைகளை விளக்கி மாவட்ட பொருளாளர் செல்வகணே சன் பேசினார். மாநில செயற் குழு உறுப்பினர் பரமசிவம் கண்டன உரையாற்றினார். மேலும் இதில் ஜெகநாதன், கோவிந்தராஜ், இராஜேஷ் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.